தேசிய காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் அலறி றிபாஸ் ஞாயிற்றுக்கிழமை (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், ஓட்டமாவடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, சட்டத்தரணி அலறி ரிபாஸ் மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அமீர் அலி உட்பட, கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.