"சுட்டு விரல் கவிதை தொகுப்பு வெளியீடும்" பெண் எழுத்தாளர்களின் மாநாடும்

(றிஸ்வான் சாலிஹு)

"சிறிலங்கா பென் கிளப்" வெளியீடாக 62 பெண் கவிஞர்களின் கவிதைகளங்கிய "சுட்டு விரல்"கவிதைத் தொகுதி வெளியீடும், முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மாநாடும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளரும், இவ்வமைப்பின் தலைவியுமான சித்தி மஷூறா தலைமையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் மிகவும் சிறப்பாக நடாத்தவிருக்கும் இவ்விழாவிற்கு கிழக்கு இளைஞர் அமைப்பு அனுசரணை வழங்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும், சிறிலங்கா பென் கிளப்பின் ஆலோசனை சபை உறுப்பினருமான ஏ.எல்.தெளபீக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், இதில் கலந்து கொள்ளும் முஸ்லிம் பெண் கவிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




"சுட்டு விரல் கவிதை தொகுப்பு வெளியீடும்" பெண் எழுத்தாளர்களின் மாநாடும்  "சுட்டு விரல் கவிதை தொகுப்பு வெளியீடும்" பெண் எழுத்தாளர்களின் மாநாடும் Reviewed by Admin Ceylon East on November 09, 2021 Rating: 5