(றிஸ்வான் சாலிஹு)
ஒலுவில் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் சம்மந்தமான பிரச்சினையினை அதன் தேவையுடையவர்கள் ரஹ்மத் பவுண்டேசனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க YWMA பேரவையின் பூரண அணுசரணையுடன், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு மிக குறுகிய நாட்களுக்குள் இக்கிணறுகளைக் கட்டிமுடித்து அம்மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஒலுவில் மக்கள் உட்பட ரஹ்மத் பவுண்டேசனின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் ஒலுவிலில் பொதுக்கிணறுகள் வழங்கி வைப்பு
Reviewed by Admin Ceylon East
on
November 08, 2021
Rating: