(எம்.பஹ்த் ஜுனைட்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதிப்பற்றாக்குறையை கவனத்திற்கொண்டு காத்தான்குடி தள வைத்தியசாலையின் அனுசரணையில் இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பு (YESDO) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காலை 8:00 மணி தொடக்கம் மதியம் 3:00 மணிவரை இடம்பெற்ற இவ்முகாமில் அதிகளவான இளைஞர்கள்,பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் உதிரங்களை வழங்கி உயிர்காக்கும் உன்னதமான செயற்பாட்டில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி YESDO நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
Reviewed by Editor
on
November 21, 2021
Rating: