(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி எஸ். மாதவன் )
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு திங்கட்கிழமை (20) வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டாக்டர் ஏ.சீ.அப்துல் றசாக் தலைமையில், இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத்.எம். ஹனிபாவுக்கு முதலாவது நாட்காட்டி உத்தியோகபூர்வமாக வழங்கி, ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வைத்திய நிபுணர்களான டாக்டர்கள். ஹிதாயா (கதிரியக்கவியல்), யுரேகா விக்கிரமசிங்க (மகப்பேற்று), எஸ்.எம். அஷ்ஹர் (சிறுபிள்ளை), எம்.சமரநாயக்க (பொது மருத்துவம்), எம்.என்.என்.எம்.சஹீர் (மயக்கவியல்), றிப்ஷான் ஜெமீல் (பொது சத்திரசிகிச்சை), விராஜ் ஜயசிங்ஹ (வாய், தாடை முக சத்திரசிகிச்சை) மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆக்கில் சரிபுத்தீன், டாக்டர். எம்.எம். தாஸிம், தொற்றா நோய் மற்றும் சுகாதாரக் கல்வி, சுகாதார மேம்பாடு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எப். மப்றூஹா,வெளிநோயர் பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் கே. ஜெசீல், ஆரம்ப அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.ஐ.ஏ. நஸீர், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டாக்டர். எம்.எச்.எம். சனூபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ் மற்றும் தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், கதிர் இயக்கவியலாளர் எஸ்.ரீ.எம்.றஹ்மத்துல்லா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய், பிரிவு பொறுப்பு வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள்,நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு, இவர்கள் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.