காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்

(ஜெமீல் கல்குடா)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று (21)காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி  மாஞ்சோலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய அலியார் அப்துல் ஹமீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இப்பகுதியில் காணி ஒன்றின் மருமகன் தாயின் சகோதரரான மாமாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் மாமாவைக்  கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதற்கிடையில்  காணித் தகராற்றிற்குரிய மாமா வெளிநாட்டில் உள்ளதுடன் கொலை செய்யப்பட்டவர் அவரது  இளைய சகோதரராவார்.

அதனைத்தொடர்ந்து மருமகன் அந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் கொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் Reviewed by Editor on December 21, 2021 Rating: 5