தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பொதுப்பட்டமளிப்பு விழா– 2022

(சலீம் றமீஸ்)

இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பொதுப்பட்ட மளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நான்கு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன


முதல் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள்பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 474 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன

 

இரண்டாம் நாள் அமர்வில் கலை கலாசாரபீடத்தினைச் சேர்ந்த 566 மாணவர்களும், மூன்றாம் நாள் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச் சேர்ந்த 642 மாணவர்களும் தமது பட்டங்களைப்    பெறவுள்ளனர்

 

நான்காவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 619 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன

 

ஐந்தாவது அமர்வில் கலை கலாசாரமுகாமைத்துவ – வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 312 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

 

அதேநேரம்வியாபாரநிருவாகம்முகாமைத்துவம்தமிழ் உள்ளிட்டதுறைகளில் பட்டப்பின் படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணிமுதுதத்துவமாணி பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையினைக்கருததிற் கொண்டுபட்டமளிப்புவிழா நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலுக்கமைய நடத்துவதற்கு பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளது.

 


தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பொதுப்பட்டமளிப்பு விழா– 2022 தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பொதுப்பட்டமளிப்பு விழா– 2022 Reviewed by Editor on December 29, 2021 Rating: 5