(றிஸ்வான் சாலிஹு)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிர் உடமைகளை இழந்த மக்களுக்கான இழப்பீடு காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (23) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரி.எம்.முஹம்மத் அன்சார் தலைமையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன் அவர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 61 நபர்களுக்கு 65 லட்சம் ரூபாய் காசோலைகளை பகிர்ந்தளித்தார்.
நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. றொசின்தாஜ், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு ஏ.எல். பைசத், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு ஏ.எல்.எம் தாஹிர் மற்றும் சமூக சேவை பிரவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.