(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி எஸ். மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஐந்து வருடங்களாக சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றி கல்முனை அஷ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் எப்.எச். பாத்திமா நஹ்தியா அவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் டொக்டர் ஏ.சீ.அப்துல் றசாக் தலைமையில் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (16) வைத்தியசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அஸாத். எம். ஹனீபா கலந்து கொண்டு ஞாபகச் சின்னமொன்றை வழங்கிவைத்ததுடன், நலன்புரிச்சங்கத்தின் உப தலைவர் டொக்டர்.எம்.எச்.எம். சனூபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆக்கில் சரிபுத்தீன், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான சியாத்.எம்.இஸ்மாயில், என். சந்திரலேகா, எழுதுவினைஞர் திருமதி. ஸலக்மாலி மற்றும் நலன்புரிசங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.