(எம். என். எம். அப்ராஸ், ஐ. எல். எம். நாசிம்)
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தகர் றிஸ்லி முஸ்தபாவினால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது .
வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் விடுதிகளுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள் என்பன வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம் ஹனிபாவிடம் இன்று (29) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வைத்தியசாலையின் குறை நிறைகளை வைத்தியசாலை அத்தியட்சகரிடம் றிஸ்லி முஸ்தபா கேட்டறிந்து கொண்டார்.
இவ்வாறான பெறுமதியான பொருட்களை வைத்தியசாலையின் தேவை கருதி துரிதமாக வழங்கியமைக்கும் வைத்தியசாலை சமூகம் சார்பாக வைத்திய அத்தியட்சகர் நன்றியினை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட், வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தகர் கே.ஏ ஜப்பார், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், றிஸ்லி முஸ்தபாவின் பிரதிநிதிகளான சம்மாந்துறையை சேர்ந்த ஏ.எம்.எம் பாரிஸ்,எஸ்.ஏ.என் சபி செய்யத், கே.எல்.எம் சப்றி என பலர் கலந்து கொண்டனர்.