(றிஸ்வான் சாலிஹு)
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் பின் அப்துல் றஹ்மான் அல்-முர்ஷித் மற்றும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் தூதுக்குழுவினர் இன்று (29) புதன்கிழமை இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் ஆராய்வதற்காக மரியாதை நிமித்தமான விஜயமொன்றை மேற்கொண்டனர்.
தேவையான நிதி வசதிகள், தொழில்நுட்ப உதவி மற்றும் நிறுவன ஆதரவின் மூலம் வளரும் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் இந்த நிதியம் பங்கேற்க ஆர்வமாக உள்ளது.
அபிவிருத்திக்கான சவூதி நிதியம் (SFD), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.