மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையம் திறப்பு

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (10) பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது.

தரமான கடலுணவுகள், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மீன் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் அமைக்கும் வேலைத் திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இந்த வருடம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 9  விற்பனை நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையம் திறப்பு மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையம் திறப்பு Reviewed by Editor on December 10, 2021 Rating: 5