மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவை வழங்குணர், சேவைமேம்பாடு என்பவற்றில் திறமைகளை வெளிக்காட்டிய சுகாதார சேவை நிறுவனங்களை தெரிவு செய்து விருதுகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27) திங்கட்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் கதிரியக்கப்பிரிவு(Radiology Department) மற்றும்ஆய்வுக்கூடசேவைகள் பிரிவு என்பவற்றுக்கான விசேட விருதுகள் கிடைக்கப்பெற்றதோடு 2020ஆம் ஆண்டின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் சிறந்த சேவை வழங்கும் நிறுவனத்திற்கான விருதில் இரண்டாம் இடத்தையும் இவ்வைத்தியசாலை தக்கவைத்துக் கொண்டது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தயாலினி சசிகுமார், தரமுகாமைத்துவ பிரிவிற்கான பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர் டாக்டர் தாஹீறா சபியுடீன், வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் திரு. எச்.எம்.எம்.ஹமீம், கதிரியக்கப்பிரிவின் பொறுப்பு உத்தியோகத்தர் திரு.எம்.ஏ.எம்.சிப்லி மற்றும் ஆய்வுக்கூட சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர் திருமதி பஜீலா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.