(எம்.பஹ்த் ஜுனைட்)
ஆரையம்பதி சிகரம் மட்/மம/சேர் ராஷிக் பரீட் வித்தியாலயம் மற்றும் சிகரம் பாலர் பாடசாலை ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எப்.எம். அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், காத்தான்குடி பிரதேச கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் , ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் டீ.தயானந்தன் மற்றும் மத குருமார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிகரம் ஜும் ஆப் பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்வியாளர்கள், பிரமுகர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கினார்கள்.
சிகரம் பாலர் பாடசாலை பாலர்களின் கலை நிகழ்வுகள், உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் விநோத உடை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களின் ஒழுக்கம்,திறமை,சிறப்பியல்பு ஆகியவற்றுக்கா சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி அதிதிகளால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடக்கது.