துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர் உயிரிழப்பு

நேற்றிரவு (24) வெள்ளிக்கிழமை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொலிஸ் ஒருவரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒலுவிலையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கே.எல்.எம்.அப்துல் காதர் சிகிச்சை பலனின்றி இன்று (25) காலை உயிரிழந்தார்.

இவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.ஜெமீல் அவர்களின் மைப்பாதுகாவலராகவும் இருத்தவராவர்.

இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தமாக நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணமடைந்துள்ளதோடு, பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மற்றும் மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

துப்பாக்கி சூட்டை நடாத்திய பொலிஸ் அதிகாரி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர் உயிரிழப்பு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர் உயிரிழப்பு Reviewed by Editor on December 25, 2021 Rating: 5