மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

(மயூரன் - மட்டக்களப்பு)

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய அனர்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 வருடங்களின் பின்பு ஆழிப்பேரலையின் 17ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தேசிய அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அறிவுறுத்தல்படி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்திய காலை 9.27 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவாக மெழுகுதிரி ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நினைவு தினத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சீயாத் மற்றும் மாவட்ட செயலகதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். புண்ணியமூர்த்தி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு Reviewed by Editor on December 26, 2021 Rating: 5