(றிஸ்வான் சாலிஹு)
மருத்துவதுறை பட்டப்படிப்பு MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின் போது சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை பெற்ற ஆலையடிவேம்பை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா அவர்கள், மருத்துவ கல்வியில் அரும்பெருஞ் சாதனை நிகழ்த்தியமைக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பட்டறை இலக்கியப் பேரவையால் பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
அமைப்பின் தலைவரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான கலாநிதி ஹனீபா இஸ்மாயில் தலைமையில் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று கடற்கரைப்பூங்காவில் நடைபெற்றது.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய கலாநிதி ஹனீபா இஸ்மாயில்,
நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப்பட்ட டாக்டர் தர்ஷிகா உரையாற்றுகையில்,
நன்றியுரையாற்றினார் அமைப்பின் அங்கத்தவர், ஓய்வு நிலை கல்வி அதிகாரி வீ.குணாளன் அவர்கள்,
இந்நிகழ்வில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இலக்கியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.