திருப்பதி வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (24) வெள்ளிக்கிழமை காலை திருப்பதி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

கௌரவ பிரதமர் உள்ளிட்டோருக்காக திருப்பதி ஆலயத்தில் இன்று விசேட ஆசீர்வாத பூஜை இடம்பெற்றது.

இத்தனிப்பட்ட விஜயத்திற்காக கௌரவ பிரதமர் அரச நிதி எதனையும் பயன்படுத்தாததுடன், சகல செலவுகளையும் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பிரதமர் ஊடக பிரிவு)




திருப்பதி வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் திருப்பதி வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் Reviewed by Editor on December 24, 2021 Rating: 5