(கே.ஏ.ஹமீட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (06) திங்கட்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 56ஆவது அமர்வு பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எல் அமானுல்லா தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளரினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொது ஜன பெரமுன, ஐக்கிய தேசிக் கட்சி ஆகிய 4 கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் 18 உறுப்பினர்களை கொண்ட சபையின் 15 உறுப்பினர்கள் கலந்து கொரண்டதோடு, இந்த வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.