YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக அதிபர் றியாஸ்

(அஹமட் ஸிறாஜ்)

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளராகவும், தேசிய சபை உறுப்பினராகவும் அட்டாளைச்சேனை YMMA இன் முன்னாள் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் JP நியமிக்கப்பட்டு அதற்கான நியமனக் கடிதம் இன்று (05) கொழும்பில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய தலைவர் சமூக நேயன் அல்-ஹாஜ் சஹீட் எம்.ரிஸ்மி அவர்களினால் இந்நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்டப் பணிப்பாளர் றியாஸ் அவர்கள் முன்னர் 15 வருடங்களுக்கு மேலாக அட்டாளைச்சேனை YMMA இன் நிருவாக உறுப்பினராகவும்,உப செயலாளராகவும், செயலாளராகவும், உப தலைவராகவும் பின்னர் கடந்த 4 வருடங்களாக தலைவராகவும் செயற்பட்டு கல்வி, கலை , கலாசாரம், விளையாட்டு , இன நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு , தேசத்தை கட்டியெழுப்புதல், மரநடுகை , புனித அல்-குர் ஆன் மனனம், குடிநீர் விநியோகம், கொரோனா ஒழிப்புத் திட்டம், நிவாரணம் வழங்கல் போன்ற பல செயற்றிடங்களை செய்து சிறந்த முறையில் அர்ப்பணிப்புகளுடன் சிறப்பாக மேற்கொண்டமைக்காக இந் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக அதிபர் றியாஸ் YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக அதிபர் றியாஸ் Reviewed by Editor on December 05, 2021 Rating: 5