(சியாத்.எம்.இஸ்மாயில்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களில் 17 மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், இருமல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த போது மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அஸாத் .எம். ஹனிபா தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதால், மீண்டும் கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டாலும் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். இதன் காரணமாக கொரோனாத் தொற்று மேலும் பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஜனவரி மாதம் 01 திகதி தொடக்கம் இன்று (19) திகதி பி.ப.3.00 மணி வரை 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- முகப்பு
- உள்நாட்டு
- வெளிநாட்டு
- விளையாட்டு
- வணிகம்
- தொழிநுட்பம்
- வேலைவாய்ப்புக்கள்
- கல்வியியல்
- சமயம்
- அரசியல்
- குற்றவியல்
- குற்றம்
- RIP
- ACCIDENT
- CeylonEast TV
-
Oops. Something went wrong. Please try again later
© 2020 ceyloneast. All rights reserved.