நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் தொடர்பிலான அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) புதன்கிழமை மாலை 6 மணி முதல் 7:45 வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல் 9:30 வரை மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் இதுவரை வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் அறிவிப்பு
Reviewed by Editor
on
January 19, 2022
Rating: