பொத்துவிலில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு

பொத்துவில் பிரதேசத்திற்கான தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக பத்து (10) ஏக்கர்  காணி பொத்துவில் - 05 கிராம நிலதாரி பிரிவில், பொத்துவில் பிரதேச செயலாளர் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இவ்இடத்திற்கான பெயர்ப்பலகையை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஜனாப். றஹீம் அவர்களினால் திங்கட்கிழமை (10) இடப்பட்டது.

இக்காணியை ஒதுக்கீடு செய்து வழங்கிய பொத்துவில் பிரதேச செயலாளர் அவர்களுக்கு மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தவிசாளர் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.



பொத்துவிலில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு பொத்துவிலில் தாவரவியல்  பூங்கா அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு Reviewed by Editor on January 12, 2022 Rating: 5