மியன்மார் முஸ்லிம்களை சிறுவர் குழந்தைகள் வயோதிபர்கள் என குடும்பம் குடும்பமாக நாட்டில் இருந்து விரட்டி அடித்த முன்னாள் பிரதமர் அவுன்சான் சுகீ walkie torquay வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு மேலும் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மியன்மார் மிலிட்டரி நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கியுள்ளது.
தற்போது நான்கு வருடங்களுக்கு சிறைவாசம் அனுபவித்து வரும் சுகீயின்சிறைவாசம் இதன் மூலம் 8 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது தொடுக்கப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இவர் 100 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தள்ளப்படுவார் என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(ஊடகவியலாளர் பாயிஸ்)
முஸ்லிம்களை சித்திரவதை செய்து விரட்டிய பிரதமரின் சிறைக்காலம் நீடிப்பு
Reviewed by Editor
on
January 11, 2022
Rating: