மாநகர முதல்வரினால் அக்கரைப்பற்றில் மூன்று வீதிகள் திறந்து வைப்பு

 (றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட புதுப்பள்ளி வட்டார ஆலீம் வீதி, ஜின்னா வீதியின் 4 வது ஒழுங்கை மற்றும் ஹிஜ்றா வீதி என்பவற்றினை இன்று (22) சனிக்கிழமை  கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று
பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார், மாநகர ஆணையாளர் ஏ. ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. விஜேதுங்க, கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள் அஸ்மி அப்துல் கபூர், முஹம்மத் சிறாஜ் மாநகர சபையின் சட்டத்தரணி எ.எல்.எம். ஆசாத் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் என்று
முதல்வரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






மாநகர முதல்வரினால் அக்கரைப்பற்றில் மூன்று வீதிகள் திறந்து வைப்பு மாநகர முதல்வரினால் அக்கரைப்பற்றில் மூன்று வீதிகள் திறந்து வைப்பு Reviewed by Editor on January 22, 2022 Rating: 5