எரிவாயு சிலிண்டர் நிறுவனம் நுகர்வோருக்கு நம்பிக்கை தரும் செய்தியை வெளியிட்டுள்ளது

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான அறிவிப்பை லிட்ரோ  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க நிறுவனம் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எல்பி எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தித் திறனை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும், கடந்த இரண்டு நாட்களில் மற்றும் இன்று 220,000  எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், விரைவில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளாந்த எல்பி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைச் சந்தைக்கு அதிகபட்சமாக 90,000-100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் தட்டுப்பாடு குறுகிய காலத்தில் நிவர்த்திக்கப்படும் என நிறுவனம் நுகர்வோருக்கு தெரிவித்துள்ளது.

(தினக்குரல்)



எரிவாயு சிலிண்டர் நிறுவனம் நுகர்வோருக்கு நம்பிக்கை தரும் செய்தியை வெளியிட்டுள்ளது எரிவாயு சிலிண்டர் நிறுவனம் நுகர்வோருக்கு நம்பிக்கை தரும் செய்தியை வெளியிட்டுள்ளது Reviewed by Editor on January 06, 2022 Rating: 5