பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் மரக்கன்றுகள் நடல்

(சர்ஜுன் லாபீர்) 

பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தினால் 2022 ம் ஆண்டு ஆரம்பிப்பதை முன்னிட்டு 5000 மரக் கன்றுகளை நடும் மர நடுகை நிகழ்ச்சித் திட்டம் கடந்த திங்கட்கிழமை (03) நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக வளாகத்திலும் மர நடுகை மேற்கொள்ளப்படல் வேண்டும் என அரசாங்க சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கினங்க கல்முனை பிரதேச செயலகத்திலும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் தலைமையில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் எம்.ஐ.அபுல் ஹசன் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.





பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் மரக்கன்றுகள் நடல் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் மரக்கன்றுகள் நடல் Reviewed by Editor on January 06, 2022 Rating: 5