ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்ட தேசிய பாடசாலை

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை அறிக்கையின் மற்றொரு கட்டமாக ஆயிரம் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் நாடு பூராவும் ஆரம்பமானது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், மாவட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்ட தேசிய பாடசாலை ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்ட தேசிய பாடசாலை Reviewed by Editor on January 07, 2022 Rating: 5