ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் உருவான "பிரபஞ்சம்"திட்டத்தின் ஊடாக கிண்ணியா அலிகார் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான டிஜிடல் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (04) மதியம் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட டிஜிடல் கற்றல் உபகரணங்கள் எதிர்க்கட்சி தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவினால் பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கபில களுப்பான, சேருவில தொகுதி அமைப்பாளர் டாக்டர் அருண சிறிசேன, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.