தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்து நமது உயிரை நாமே பாதுகாப்போம் - சுகாதார வைத்திய அதிகாரி காதர்

(றிஸ்வான் சாலிஹு)

அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுமாறும், கொவிட் தடுப்பூசி ஏற்றாதவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெரியவர்கள், இளைஞர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என அனைவரும் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கட்டாயம் சுகாதார வழிமுறைகளை நீங்களாக பேணிக் கொள்ளுவதோடு, குறிப்பாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை பேணிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் உயிரின் பெறுமதி உணர்ந்து தேவையற்ற ஒன்றுகூடல்களான திருமண வீடுகள், விளையாட்டு நிகழ்வுகள், திறப்பு விழாக்கள், சனங்களினை கூட்டும் விருந்தோம்பல்கள், இது போன்ற அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் பொது மக்களை தவிர்ந்து கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொண்டுள்ளார்.





தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்து நமது உயிரை நாமே பாதுகாப்போம் - சுகாதார வைத்திய அதிகாரி காதர் தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்து நமது உயிரை நாமே பாதுகாப்போம் - சுகாதார வைத்திய அதிகாரி காதர் Reviewed by Editor on January 27, 2022 Rating: 5