மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் நேற்று (20) வியாழக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து கரைச்சி பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தோடு, இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி இன்னும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இச்சம்பவத்தில் மார்பு நோய் சிகிச்சை நிலையம், பாலியல் நோய் சிகிச்சை நிலையம், பரிசோதனை அறை, களஞ்சிய அறை, வைத்தியர் சிகிச்சை அறை ஆகியன எரிந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (21) காலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து Reviewed by Editor on January 21, 2022 Rating: 5