கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் றிபாஸ் பதவியேற்றார்

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடமையாற்றிய டாக்டர் ஜி. சுகுணன் செவ்வாய்க்கிழமை (18) மட்டக்களப்பு  மாவட்ட  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்தே ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டாக்டர் றிபாஸ் நியமிக்கப்படவுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த இவர், தற்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றியவராவார்.

இப்பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் உட்பட வைத்திய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.





கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் றிபாஸ் பதவியேற்றார் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் றிபாஸ் பதவியேற்றார் Reviewed by Editor on January 19, 2022 Rating: 5