நேற்று (11) முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட தடுப்பூசி வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மேலும் நான்கு தடுப்பூசி நிலையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை இரவு 08:00 மணி வரை திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவரேனும் தடுப்பூசியைப் பெற முடியாவிட்டால், அவர்கள் அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட நடமாடும் தடுப்பூசி சேவை வாகனங்கள் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- முகப்பு
- உள்நாட்டு
- வெளிநாட்டு
- விளையாட்டு
- வணிகம்
- தொழிநுட்பம்
- வேலைவாய்ப்புக்கள்
- கல்வியியல்
- சமயம்
- அரசியல்
- குற்றவியல்
- குற்றம்
- RIP
- ACCIDENT
- CeylonEast TV
-
Oops. Something went wrong. Please try again later
© 2020 ceyloneast. All rights reserved.