நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்று (07) மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சு எரிபொருள் வழங்காவிடின் நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மின்சாரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு துண்டிக்க நேரிடும் என்று சபை தெரிவித்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்
Reviewed by Editor
on
January 07, 2022
Rating: