தேசிய கபடி போட்டியில் சம்பியனானது நிந்தவூர்

இலங்கை கபடி சம்மேளனம் 2வது தடவையாக ஏற்பாடு செய்த மாவட்ட ரீதியிலான தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் 2022.01.08,09,10 திகதி கொழும்பு-07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம், மட்டக்களப்பு மாவட்ட அணிக்குமிடையில் பலப்பரீட்சை நடைபெற்றது. 

கபடி நட்சத்திர வீரர் அஸ்லம் சஜா, அம்பாறை மாவட்ட அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக் கொடுத்தார், போட்டியின் ஆட்டநேர முடிவின் போது 56-20 என்ற புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணியை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வீழ்த்தி முதல் முறையாக தேசிய கபடி சம்பியன்ஷிப் பட்டத்தை அம்பாறை மாவட்டம் சார்பாக நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் சுவீகரித்ததுக் கொண்டது.

SM. சஹாப்தீன் (நிந்தவூர் செய்தியாளர்)

Photo : National Kabaddi Championship -2022 Man's Final Champion (Gold Medal) Ampara Nintavur MATHEENIAN.









தேசிய கபடி போட்டியில் சம்பியனானது நிந்தவூர் தேசிய கபடி போட்டியில் சம்பியனானது நிந்தவூர் Reviewed by Sifnas Hamy on January 11, 2022 Rating: 5