(மலைவாஞ்ஞன்)
சிவனொளிபாதமலை யாத்திரை செய்து திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் ரிகாடன் பகுதியில் இன்று (17) திங்கட்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கார் கொங்கிறீட் மின் கம்பத்தில் மோதூண்டதில் மின் கம்பம் வீதியின் குறுக்கே உடைந்து வீழ்ந்ததனால் அவ்வீதியூடான பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிப்புக்குள்ளாகியதுடன் சில பிரதேசங்களுக்கு பல மணித்தியாலங்கள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.
விபத்தில் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- முகப்பு
- உள்நாட்டு
- வெளிநாட்டு
- விளையாட்டு
- வணிகம்
- தொழிநுட்பம்
- வேலைவாய்ப்புக்கள்
- கல்வியியல்
- சமயம்
- அரசியல்
- குற்றவியல்
- குற்றம்
- RIP
- ACCIDENT
- CeylonEast TV
-
Oops. Something went wrong. Please try again later
© 2020 ceyloneast. All rights reserved.