(எம்.பஹ்த் ஜுனைட்)
மட்டக்களப்பு நகரில் நீண்ட காலமாக இயங்கிவரும் வர்த்தக நிலையமான பிலால் எம்போரியம் தனது வர்த்தக நிலையத்தில்
சுமார் 14 வருடங்களாக மிக நேர்மையாகவும், வினைத்திறனாகவும் கடமை புரிந்து வந்த ஊழியரான ஏறாவூரை சேர்ந்த முஹம்மத் ஸிபான் அவர்கள் சுயமாக தொழில் ஆரம்பிக்கும் நோக்கில் அந் நிறுவனத்தை விட்டு விலகிச் செல்லும்போது அவரை வாழ்த்தி பிரியாவிடை நிகழ்வு பிலால் எம்போரியத்தின் உரிமையாளர் கே.எல்.கலீல் ஹாஜியாரின் தலைமையில் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் பிரியாவிடை வைபவத்தின் போது ஊழியர் ஸிபான் அவர்களுக்கு உரிமையாளர் மற்றும் அவரது புதல்வர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன், சக ஊழியர்களால் அன்பளிப்புகள் வழங்கியுன் கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் "இவர் விற்பனையாளர்களுக்கு ( Salesman) ஒரு ( Role model) முன்மாதிரியானவர்" இவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
தனது ஊழியர்களின் முயற்சிக்கு தடையாக இருக்காமல் அவர்களது முன்னேற்றத்திற்க்கு வாய்ப்பு வழங்கி உட்சாகப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய வர்த்தகர்கள், வர்த்தக சமூகத்தினருக்கும் முன்மாதிரியான செயற்பாடாகும்.
- முகப்பு
- உள்நாட்டு
- வெளிநாட்டு
- விளையாட்டு
- வணிகம்
- தொழிநுட்பம்
- வேலைவாய்ப்புக்கள்
- கல்வியியல்
- சமயம்
- அரசியல்
- குற்றவியல்
- குற்றம்
- RIP
- ACCIDENT
- CeylonEast TV
-
Oops. Something went wrong. Please try again later
© 2020 ceyloneast. All rights reserved.