மருமகன் தாக்கி கொலை செய்யப்பட்ட மாமா

புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் நேற்று (10) நண்பகல் குடிபோதையில் ஏற்பட்டு வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியத்தில், மாமாவை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்த சந்தேக நபர் புதுவருடமன்று குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்று கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



மருமகன் தாக்கி கொலை செய்யப்பட்ட மாமா மருமகன் தாக்கி கொலை செய்யப்பட்ட மாமா Reviewed by Editor on January 11, 2022 Rating: 5