தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் பதவியுயர்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நிந்தவூரைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் பதவியுயர்வு பெற்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொன்டார்.

பொலிஸ் சேவையில் கடந்த 33 வருடங்களாக தன்னை பாதுகாப்புத் துறையில் அற்பணிப்புடன் சேவையாற்றிய நிருவாகத் துறையில் ஆழுமையுள்ள ஒருவராவார்.

இலங்கையின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இவர் நாட்டின் பல பாகங்களிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளதோடு நாட்டின் பல  பொலிஸ் நிலையங்களில் பல முக்கிய பிரிவுகளில் பதவியமர்த்தப்பட்டு திறன்பட சேவையாற்றி பொலிஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

ஆரம்ப பொலிஸ் சேவையினை கொழும்பு, மொனறாகலை, தனமல்வில, வீரக்கொடையிலும் குறிப்பாக பயங்கரவாதம் தலைதூக்கிய அச்சந்தர்ப்பத்தில் தாய் நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்து நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் பதவியுயர்வு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் பதவியுயர்வு Reviewed by Editor on January 15, 2022 Rating: 5