பிரதேச சபையின் உப காரியாலயம் ஆளுநரினால் திறந்து வைப்பு

வெலிமடை பிரதேச சபையின் சபை நிதியத்தினால் டயரபா சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட தம்பவின்ன பிரதேச சபையின் உப காரியாலயம் மற்றும் நூலக வளாகம், அரச நிறுவனங்களுக்கான அலுவலக வளாகம் ஆகியன பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (20) வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வெலிமடை பிரதேச சபையின் தலைவர் எஸ்.ஏ.ஆர். பந்துசேன உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











பிரதேச சபையின் உப காரியாலயம் ஆளுநரினால் திறந்து வைப்பு பிரதேச சபையின் உப காரியாலயம் ஆளுநரினால் திறந்து வைப்பு Reviewed by Editor on January 21, 2022 Rating: 5