பலஸ்தீன தூதுவரை சந்தித்த முஷாரப் எம்.பி

(அலுவலக செய்தியாளர்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களுக்கும் பலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு டாக்டர் சுஹைர் எம்.எச். சஹீட் அவர்களுக்கும் இடையான சிநேகபூர்வமான சந்திப்பு, பலஸ்தீன தூதரகத்தில் இன்று (27) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பலஸ்தீன் - இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள், இரண்டு நாடுகளிலுமுள்ள மக்களின் சமகால சமூக, அரசியல் நிலைவரங்கள் என பரந்து பட்ட விடயப்பரப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பு அர்த்தபூர்வமான சந்திப்பாக அமைந்ததோடு, எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றக்கூடிய அமைவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பலஸ்தீன தூதுவருக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட தூதுவர் அவர்கள் வருகை தருவதற்கான தயார்படுத்தல்களை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




பலஸ்தீன தூதுவரை சந்தித்த முஷாரப் எம்.பி பலஸ்தீன தூதுவரை சந்தித்த முஷாரப் எம்.பி Reviewed by Editor on January 27, 2022 Rating: 5