பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக கடமையேற்றுள்ள டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களை பாராட்டி வாழ்த்தும் நிகழ்வு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் ஏற்பாட்டில் அருகம்பே ரொக்கோஸ் ஹோட்டலில் நேற்று (26) புதன்கிழமை இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளராக கடமையேற்றுள்ள டாக்டர் றிபாஸ் அவர்களின் சேவைகள் மற்றும் நிர்வாகத்திறன் பற்றி சிலாகித்து பாராளுமன்ற உறுப்பினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு, பொத்துவில் பிரதேசம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் வை.எல்.நியாஸ் அவர்களால், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பொத்துவில் ஆதார வைத்தியசாலயின் புதிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப், பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எச்.ஏ. றஹிம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பணிப்பாளரின் சேவை குறித்து உரையாற்றினார்கள்.