13 நாட்களாக உயிருக்கு போராடிய யானை நேற்று உயிரை விட்டது

(இக்ராம் அப்துல் ரசாக் - முள்ளிபொத்தானை)

திருகோணமலை மொரவெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் அண்ணளவாக 40 வயதுடைய யானை ஒன்று கடந்த 06ஆம் திகதி குழியில் விழுந்த அப்பாவி யானை, நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மலை 06.32 க்கு தனது உயிரை விட்டது.

13 நாட்களாக மீன் வளர்ப்புக்காக வெட்டப்பட்ட தனியார் காணியில் அமைந்துள்ள சுமார் 3 அடி ஆழ குழியில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

யானையின் பின் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இனம் காண முடியாத வகையில் ஏதோ ஒரு பாதிப்பு யானைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வனவிலங்கு திணைக்களத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற போதிலும், போதிய சிகிச்சையின்றி யானை உயிரிழந்துள்ளது.

மேலும், யானை இறந்து சுமார் 12 மணி நேரங்கள் கடந்தும் இது வரை யானையை அகற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் , யானையில் இருந்து அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்து உள்ளதாகவும்,  “காப்பாற்ற தான் முடியவில்லை, அடக்கம் செய்யவும் தாமதமா?” என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



 




13 நாட்களாக உயிருக்கு போராடிய யானை நேற்று உயிரை விட்டது 13 நாட்களாக உயிருக்கு போராடிய யானை நேற்று உயிரை விட்டது Reviewed by Editor on February 21, 2022 Rating: 5