பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

(ஏ.எல்.றியாஸ்)

பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யூ.அப்துல் சமட்டின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை,  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அல்-ஹுதா வித்தியாலயம் ஆகிய தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் இன்று (21) திங்கட்கிழமை தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வோருக்குமே குறித்த நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை வைத்திய அத்தியட்சகர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.





பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு Reviewed by Editor on February 21, 2022 Rating: 5