உக்ரேனிலுள்ள 20 இலங்கையர்களை அழைத்து நடவடிக்கை

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக உக்ரேன் - போலந்து எல்லைக்கு அருகாமையில் வந்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களை போலந்துக்கு அழைத்து வந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் தொடர்பில் போலந்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அனைவரையும் போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தூதுவர் எம்.ஆர். ஹசன் கூறினார்.



உக்ரேனிலுள்ள 20 இலங்கையர்களை அழைத்து நடவடிக்கை உக்ரேனிலுள்ள 20 இலங்கையர்களை அழைத்து நடவடிக்கை Reviewed by Editor on February 28, 2022 Rating: 5