வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா

(றிஸ்வான் சாலிஹு)

Club Photo Ceylonica ஏற்பாட்டில் கடந்த சனி (29) மற்றும் ஞாயிறு (30) ஆகிய இரு தினங்களிலும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் இடம்பெற்ற "அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா 2020/2021" மிகவும் சிறப்புற நடைபெற்று முடிந்தது.

ஆரம்ப நாள் (சனிக்கிழமை) நிகழ்வுகள், தேசிய ரீதியில் புகைப்பட விருது பெற்றவரும், விழா ஏற்பாட்டாளருமான அப்துல் ஹமீட் தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் கலந்து சம்பிரதாயமான முறையில் புகைப்பட திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்.

இறுதி நாள் நிகழ்வுகள் (ஞாயிற்றுக்கிழமை) Club Photo Ceylonica அமைப்பின் தவிசாளரும், புகைப்பட விருது பெற்றவருமான டாக்டர் ஆகில் அஹமட் ஷரீபுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், கெளரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வீ.ஜெகதீசன் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு.எஸ்.நவநீதன் அவர்களும், விசேட அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தெளபீக், சர்வதேச புகைப்பட விருது பெற்ற திரு.ஹர்ஷ மதுரங்க ஜெயசேகர, Metropolitan நிறுவனத்தின் கமறா பிரிவின் தலைமை அதிகாரி திரு.பிரவீன் சமரகோன், புகைப்படக்கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

எமது பிராந்திய புகைப்பட கலைஞர்களின் திறமைகளை போட்டிகள் வாயிலாக வெளிக்கொணர்ந்து அவர்களைப் பாராட்டி ஊக்குவித்து பரிசில்கள் மற்றும் கெளரவிப்புக்களும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதோடு, இத்திருவிழாவில் சர்வதேச புகைப்படப் போட்டிகள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களிடையே வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்கள், அக்கரைப்பற்றின் வரலாற்றுடன் தொடர்புடைய அரிதான பல பழைய புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.























வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அக்கரைப்பற்று புகைப்படத் திருவிழா Reviewed by Editor on February 01, 2022 Rating: 5