கிண்ணியா பிரதேச செயலாளராக மீண்டும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எம்.எச்.எம்.கனி, இன்று (28) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமை புரிந்த எம்.எச்.எம்.கனி அவர்கள், கடந்த 27.07.2021ம் திகதி திடிரென வெருகல் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டு சுமார் 7 மாதங்கள் அங்கு கடமை புரிந்தார்.
இந்நிலையில் மீண்டும் 26.02.2022ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கிண்ணியா பிரதேச செயலாளராக இன்று, கிண்ணியா பிரதேச செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதேச செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட எம்.எச்.எம்.கனி
Reviewed by Editor
on
February 28, 2022
Rating: