கத்தாரில் நடைபெறும் சர்வதேச விழாவில் முதல் முறையாக இலங்கையைச் சேர்ந்த சர்பான் அவர்களின் ஓவியம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் அம்பாறை மாவட்டம் இறக்காமத்தைச் சேர்ந்தவரும், தற்போது தொழில் நிமிர்த்தம் கத்தார் நாட்டில் வசித்து வரும் ஓவியக் கலைஞர் நஸார் சர்பான் அவர்களின் குதிரை ஓவியம் கத்தார் சர்வதேச விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தாரா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் இவரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறுகின்ற இவ் விழாவில் அமெரிக்கா உட்பட 11 நாடுகள் பங்கேற்கின்றது.
இவர் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஜனாப்.நஸார் அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்காமத்தைச் சேர்ந்த சர்பானின் ஓவியம் கட்டார் சர்வதேச விழாவில்
Reviewed by Editor
on
February 05, 2022
Rating: