(றிஸ்வான் சாலிஹு)
சமுர்த்தி முகாமையாராக நியமனம் பெற்ற ரீ.கே.றஹ்மத்துல்லா நேற்று (21) திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இறக்காமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.தஸ்லீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நசீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், உதவி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசினால் பட்டப் படிப்பை நிறைவு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, சமுர்த்தி முகாமையாளர்களாக நியமனம் செய்யும் திட்டத்தின் கீழ் இந்நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.