சமுர்த்தி மானியத்தொகை வழங்கும் நிகழ்வு

(எஸ்.எம்.அறூஸ்)

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக சமுர்த்திப் பயனாளிகளுக்காக அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சமூர்த்தி மானியத் தொகையினை வழங்கும் நிகழ்வு இன்று (14) திங்கட்கிழமை காலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.றிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்  அதிகரிக்கப்பட்ட மாணியத் தொகையினையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.எம்.நிஹ்மத்துல்லா, சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், சமூர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஏ.இமாமுடீன் மற்றும் சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்,தீகவாபி, திராய்க்கேணி போன்ற கிராமங்களிலுள்ள 32 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் அதிகரிக்கப்பட்ட சமூர்த்தி மானியக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.









சமுர்த்தி மானியத்தொகை வழங்கும் நிகழ்வு சமுர்த்தி மானியத்தொகை வழங்கும் நிகழ்வு Reviewed by Editor on February 14, 2022 Rating: 5